திருவாரூர் மாவட்டம் வைப்பூர் காவல் நிலையம் அருகே சாலைப் பணியாளரை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வைப்பூர் பகுதியில் பணி செய்து கொண்டிருந்த சாலை பணியாளர் சேகர் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் காவல் நிலையம் அருகே வைத்து, தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர், நாகை அடுத்த ஓரத்தூர் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.