தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் பின்புறம் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இதில் நுழைந்த மர்மநபர், இரும்பு கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றுள்ளார்.
அப்போது, திடீரென அலாரம் ஒலித்ததால், மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதன்படி கீழ அழகு நாச்சியார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர்.