திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இயந்திரத்தின் மூலம் நெல் நடவு செய்யும் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
கே.வி.பேட்டை ஊராட்சியில் விவசாயி ஒருவர் இயந்திர நடவு மூலம் நாற்றங்கள் பயிர் செய்து இருந்தார்.
இந்நிலையில் கேவி பேட்டை பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், இயந்திரத்தின் மூலம் நடவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது ஆர்டிஓ சிவசுப்பிரமணியன், தாசில்தார் முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.