கன்னியாகுமரியில் சொத்து எழுதி தர மறுத்த மாமியாரை கூலிப்படையை வைத்து கடத்திய மருமகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராஜாவூர் பகுதியை சேர்ந்த ஜெபி சகாய மெட்ல் டிலா தனது மகளை அஞ்சுகூட்டு விளை பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவருக்கு திருமணம் செய்துவைத்தார்.
இந்நிலையில் சொத்துக்களை தம் பெயரில் எழுதித் தரக்கோரி மாமியாரிடம் சுபாஷ் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாமியாரை கூலிப்படையை வைத்து கடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் தாணு, அஜய் உள்ளிட்ட 6 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சுபாஷை தேடி வருகின்றனர்.