தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலியானது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
கீழநம்பிபுரத்தைச் சேர்ந்த குமார் வெங்கடேசன், பொன்மாடசாமி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் எட்டையபுரம் நோக்கி சென்றுள்ளனர்.
பின்னர் முத்தலாபுரம் பாலம் அருகே உள்ள கடையில் குடிநீர் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது தூத்துக்குடி நோக்கி அதிவேகமாக சென்ற கார்
நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் குமார் வெங்கடேசன் மற்றும் பொன்மாடசாமி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து காரை ஓட்டி வந்த பேகம்பூரைச் சேர்ந்த முகமது சுமைலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.