காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களை குறிவைத்து கஞ்சா விற்றுவந்த நபர் கைது செய்யப்பட்டார்.
ரகசிய தகவலையடுத்து ராயன்குட்டை என்ற இடத்தில் வசித்து வரும் பிரவீன் குமார் என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் இரண்டே கால் கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், பிரவீன் குமாரை கைது செய்தனர்.