சிவங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 1700 கிலோ எடை உள்ள சரக்கு வாகனத்தை இலங்கையை சேர்ந்த முதியவர் தனது தாடியால் கயிறு கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 60 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடைபெற்ற சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியில் கலந்து கொண்டார்.
அப்போது 1700 கிலோ எடைக் கொண்ட சரக்கு வாகனத்தை தனது தாடியால் கயிறு கட்டி 15 நிமிடங்களில், 510 மீட்டர் தூரம் இழுத்து இலங்கையை சேர்ந்த முதியவர் சாதனை படைத்தார்.