துப்பாக்கியை சட்ட விரோதமாக வாங்கிய வழக்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதில் ஹண்டர் பைடன் குற்றவாளி என உறுதி செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் பைடன், தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் அதேசமயம் மேல்முறையீடு செய்வது குறித்தும் ஆலோசிப்பதாகவும் கூறினார்.