விமான விபத்தில் சிக்கி மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் அதிகாரப்பூர்வமாண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியின் துணை அதிபராக சவ்லோஸ் சிலிமா இருந்து வந்துள்ளார்.
இவர் முசுசூ என்ற நகருக்கு ராணுவ விமானம் மூலம் பயணம் செய்தார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலே மோசமாக காலநிலை காரணமாக விமானம் மாயமானது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானம் விபத்துக்குள்ளானதும், அதில் பயணித்த துணை அதிபர் உள்பட அனைவரும் உயிரிழந்ததும் தெரியவந்தது.