ஆந்திர பிரதே முதல்வராக 4வது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.
ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது. ஜனசேனா கட்சி 21 இடங்களிலும் . பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது.
இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எம்.ஏ.க்கள் கூட்டத்தில் என்டிஏ சட்டப்பேரவை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்ததை தொடர்ந்து,
விஜயவாடா கேசரப்பள்ளி தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவை பிரதமர் மோடி கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், அமைச்சராக பதவியேற்றார்.
பின்னர் நடிகரும், தமது சகோதரருமான சிரஞ்சிவியிடம் அவர் ஆசி பெற்றார்.
பின்னர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
இதன் பின்னர் 22 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். விழாவில், முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்டோரிடம் நலம் விசாரித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.