திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
மணப்பாறை ஆட்டுச்சந்தையில் அண்டை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இதில் நாட்டு ஆடுகள், கொடி ஆடுகள், செம்மறி ஆடுகள் என ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும் நிலையில் ஒரு ஆட்டின் விலை 40 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டதாகவும், ஒரு கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.