ராமநாதபுரத்தில் உள்ள சந்தன மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் உற்சவத்தில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வாக 208 பால் குடங்களைக் கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.