குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை ஒட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
இதில் குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது குற்றம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வலியுறுத்துகிறது. இந்நிலையில் தொழிலாளர் நலன் துறை சார்பில் திருச்சியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசு வாகனங்கள் மற்றும் தனியார் ஆட்டோக்களில் விழிப்புணர்வு குறித்த விளம்பரங்கள் ஒட்டப்பட்டன.