நீலகிரி மாவட்டம் உதகை அருகே மேல் தலையாட்டி மந்து முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் விமரிசையாக நடை பெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விசேஷ ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து, காலை 5 மணிக்கு மேல் யாகசாலை பூஜை மற்றும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.