புதுச்சேரியில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த விவகாரத்தையடுத்து, மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரி ரெட்டியார் பாளையம் புதுநகர் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் மூலமாக விஷவாயு தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர்.
அப்பகுதி மக்கள் வீட்டு கழிவறையை பயன்படுத்த அச்சப்படுவதால், உழவர்கரை நகராட்சி சார்பில் தற்காலிக கழிவறையும் அமைக்கப்பட்டுள்ளது.