மாநிலத்தில் சிறந்த மருத்துவமனை என்று விருதுபெற்ற தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பாதுகாப்பின்றி மருத்துவ கழிவுகள் எரிக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த மருத்துவமனை அண்மையில் காயகல்ப் விருதுடன் 50 லட்சம் காசோலை பெற்றது. இந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டி எரிப்பதாகவும், இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
தற்போது மருத்துவமனை பின்புறம் உள்ள கட்டடத்தில், மருத்துவ கழிவுகளை கொட்டி எரிக்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.