உத்தர பிரதேசத்தில் வென்ற இண்டியா கூட்டணி எம்.பி.க்களில் 6 பேர், தீவிர குற்ற வழக்கை எதிர்கொண்டுள்ளனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் இண்டியா கூட்டம் அதிக இடங்களை கைபற்றியது.
இந்நிலையில் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த 6 எம்.பி-க்கள் மீது 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்கும் விதமான பல குற்ற வழக்குகள் இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர் காஜிப்பூர் எம்.பி. அஃப்சல் அன்சாரி. இவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்.
அதுபோல அசம்கார் எம்.பி. தர்மேந்திர யாதவ், ஜான்பூர் எம்.பி. பாபு சிங், சுல்தான்பூர் எம்.பி. ராம்பால் நிஷாத், சந்தாலி எம்.பி. வீரேந்திர சிங், சஹாரன்பூர் எம்.பி. இம்ரான் மசூட் ஆகியோரும் தீவிர குற்ற வழக்கை எதிர்கொண்டுள்ளனர்.
மக்கள் பிரதிநிதிகள் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை பெற்றால், பதவியை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.