தேனி மாவட்டம் போடி அருகே மாணவன் உட்பட 15-க்கும் மேற்பட்ட நபர்களை கடித்து குதறிய தெருநாயால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ரங்கநாதபுரம், தர்மத்துப்பட்டி, கரட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் மாலை நேரத்தில் உலா வந்த வெறி நாய் ஒன்று, ரங்கநாதபுரம் பகுதியில் சிலரை கடித்தது.
சமீபத்தில் 8 வயது மாணவரை நாய் கடித்ததால், அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
15-க்கும் மேற்பட்ட நபர்களை கடித்து குதறிய நாயை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.