திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி நகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் நடுவே ஆங்காங்கே மின்கம்பங்கள் முறையாக அகற்றப்படாமல் உள்ளது.
இதனால் அவ்வழியாக செல்ல முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் மின் கம்பங்களை விரைந்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.