கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிறந்து சில மணி நேரங்களேயான பச்சிளம் குழந்தை சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது.
காவல்காரன்பட்டி பகுதியில் சாலையோரத்திலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், குழந்தையை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இத்தகைய சம்பவங்களில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு உள்ளிட்ட அமைப்புகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.