அ.தி.மு.க.வுடன் இணையும் எண்ணம் இல்லை என அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் சோனியா காந்தி மூலம் தமிழக முதல்வர் பேசி, தண்ணீர் பெற்று தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் என்டிஏ வேட்பாளர் குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
அ.ம.மு.க தொடங்கி 7 ஆண்டுகள் ஆன நிலையில், சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும், அ.தி.மு.க.வுடன் இணையும் எண்ணம் இல்லை என்றும் டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பே கிடையாது என்றும் பேட்டியின்போது அவர் கூறினார்.