நீட் தேர்வு விவகாரத்தில், தேசிய தேர்வு முகமைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக கூறப்படுவது மற்றும் கருணை மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.