கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், டெல்லியில் இருந்து திராஸ் செல்லும் மோட்டார் சைக்கிள் பயணத்தை ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கரியப்பா மைதானத்தில் தொடங்கிய இப்பேரணி ஜூன் 20ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் திராஸில் நிறைவடைகிறது.
கார்கில் போர் முடிந்து 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.