தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
வாசுதேவநல்லூர் பகுதியில் வசித்து வரும் முருகன் தனது குடும்பத்துடன் தேனிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.
வாசுதேவநல்லூர்- உள்ளாறு இடையே சென்றபோது காரில் இருந்து புகை வந்துள்ளது. உடனே சுதாரித்துக்கொண்ட முருகன் மற்றும் குடும்பத்தினர் காரைவிட்டு வெளியேறினர்.
இதனைத்தொடர்ந்து கார் முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.