அரியலூரில் அரசுப் பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அரியலூரில் இருந்து இருப்புலிகுறிச்சி நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து ராயம்புரம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
இந்த விபத்தில் 12க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், மின்கம்பத்தில் மின்சாரம் செல்லாததால் பெருவிபத்து தவிர்க்கப்பட்டது.