காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே, எல்லை பாதுகாப்புப் படை வீரரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏரிவாய் பகுதியைச் சேர்ந்த கனக சபாபதி என்ற எல்லை பாதுகாப்புப்படை வீரர் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் தனது நண்பர் ஆனந்த்ராஜுடன் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது ஏற்பட்ட தகராறில், அடையாளம் தெரியாத நபர்கள் கனக சபாபதியையும், ஆனந்த்ராஜையும் சரமாரியாக வெட்டினர்.
படுகாயமடைந்த கனக சபாபதி, தனது இரு சக்கர வாகனத்தில் ஆனந்தராஜை உட்கார வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நிலையில், பாதி வழியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆனந்த் ராஜ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.