திருப்பூர் குமரன் சாலையில் பொதுமக்களை கடித்த 6 வெறி நாய்களை தனியார் அமைப்பினர் பிடித்து சென்றனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெறிநாய்கள் கடித்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகாரளித்ததைத் தொடர்ந்து, குமரன் சாலை குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த 6 வெறிநாய்களை தனியார் அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.