ஆம்பூர் அருகே பாலாற்றில் கழிவுநீர் திறந்துவிடும் தோல் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திய தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை பாலாற்றில் நேரடியாக திறந்து விடுகின்றன.
இதனால் பாலாறு முழுவதும் நுரை ததும்பி காணப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தோல் தொழிற்சாலைகள் நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.