பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள நிலையில், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பிடி.உஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிடி.உஷா, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சரிடம் விவரித்ததாக தெரிவித்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கை விட அதிக பதக்கங்களை எதிர்பார்ப்பதாக கூறிய அவர், தற்போது வரை 97 வீரர்கள் தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.