குவைத் தீ விபத்தில் பலியானவர்களில் 12 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
குவைத் தீ விபத்து நிகழ்ந்ததன் எதிரொலியாக கேரள அமைச்சரவை அவசரமாக கூடியது.
இதில், குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜையும், மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரையும் உடனடியாக அங்கு அனுப்பிவைக்க முடிவு எடுக்கப்பட்டது.