ஆந்திர பிரதேசத்தில் மக்கள் ஆட்சி தொடங்கியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
திருப்பதி கோயிலில் தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஆந்திர மக்கள் மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளதாகவும், இதுபோன்ற வெற்றியை தாம் பார்த்ததில்லை என தெரிவித்தார்.
மாநிலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும் என தெரிவித்த அவர், தம் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்றுவேன் என்றும் கூறினார். ஆந்திராவை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.