முல்லைப்பெரியாறு அணையில் ம திய கண்காணிப்பு குழு இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை திகழ்ந்து வருகிறது.
பருவ மழைக் காலங்களில் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம், அணையின் உறுதித்தன்மை, அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகள் தொடா்பாக, மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு செய்வது வழக்கமாகும்.
இந்நிலையில், ஒன்றிய நிர்வாக ஆணைய தலைமை பொறியாளர் ராகேஷ் காஷ்யப், தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கேரள மாநில முதன்மை செயலாளர் அசோக் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இரு நாட்கள் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்கின்றனர்.
முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட கேரள அரசு முயன்று வரும் நிலையில், அணையின் உறுதித்தன்மையை மத்திய கண்காணிப்புக்குழு ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.