ஜி7 உச்சி மாநாட்டையொட்டி, இத்தாலியின் அபுதாலியா பிராந்தியத்துக்கு வருகை தந்த சர்வதேச தலைவர்களுக்கு அந்த நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி உற்சாக வரவேற்பு அளித்துள்ளார்.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட பொருளாதாரத்தில் மேம்பட்ட ஏழு நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு, இத்தாலியின் அபுதாலியா பிராந்தியத்தில் நடைபெறுகிறது.
ஜூன் 13 முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், சர்வதேச தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அந்த வகையில் இத்தாலி வந்த ஜி7 உறுப்பு நாடுகளான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோருக்கு இத்தாலி அதிபர் ஜார்ஜியா மெலோனி உற்சாக வரவேற்பு அளித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடியும் ஜி7 மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.