நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீஸ் காவலில் உள்ள நிலையில், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகா சுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்ஷன் கைதைக் கண்டித்து அவரது ரசிகர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அன்னபூர்ணேஸ்வரி நகர் காவல் நிலையத்திலிருந்து 200 மீட்டர் சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.