ஜம்மு – காஷ்மீரில் பேருந்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக சுமார் 50 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் அண்மையில் பேருந்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக 50 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக ரியாசி சிறப்பு காவல் ஆய்வாளர் மொஹிதா சர்மா தெரிவித்துள்ளார்.