ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான், சீனா இடையிலான பொருளாதார வழித்தடத்தில் ஜம்மு-காஷ்மீரை குறிப்பிட்டு இருநாடுகளும் கூட்டாக அறிக்கை வெளியிட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி என்றும், இதுபோன்ற தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுவதை பாகிஸ்தானும், சீனாவும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.