கும்பகோணம் அருகே ஒரு சில பகுதிகளில் மட்டும் தார் சாலை அமைக்கப்படுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே ஏரகரம் ஊராட்சி பகுதியான, ஜாமியா நகர் பகுதியில், கடந்த 20 ஆண்டுகளாக சாலை பழுதடைந்து, பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
பொதுமக்கள் கோரிக்கையின் பேரில், அப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
ஆனால், சாலையை முழுமையாகப் போடாமல் குறிப்பிட்ட ஒரு சில பகுதிகள் மட்டுமே சாலை பணி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, தரமான சாலையை முழுமையாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.