தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் மையப்பகுதியில் மர்ம நபர்கள் இளைஞர் ஒருவரை சரமாரியாக தாக்கி படுகொலை செய்தனர்.
பாலாப்பூர் அடுத்த ராயல் காலனியில் சமீர் என்ற இளைஞரை மர்ம நபர்கள் சிலர் கட்டையால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையில் ஈட்பட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.