ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பதவியேற்ற நிலையில், அமைச்சரவை இலாகா தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிர்வாகத்துறை, பொதுத்துறை நிறுவனங்களை தன்வசம் வைத்துள்ளார்.
துணை முதலமைச்சரான பவன் கல்யானுக்கு, பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித்துறை, சுற்றுச்சூழல், ஊரக குடிநீர் விநியோகம், அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் வனத்துறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ்-க்கு மனித வள மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அனிதா, உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அச்சன் நாயுடுவுக்கு விவசாயம் மற்றும் கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.