இனி சுகாதாரமற்ற முறையில் பழச்சாறு விற்பனை செய்ய மாட்டேன் என விற்பனையாளர் கைக்கூப்பி பொதுமக்களிடம் சரணடைந்த சம்பவம் புதுக்கோட்டையில் அரங்கேறியுள்ளது.
புதுக்கோட்டை திருமயம் சாலையில் நடமாடும் பழச்சாறு வண்டியில் கரும்பு, தர்பூசணி, திராட்சை, ஆப்பிள் உள்ளிட்ட அனைத்து பழச் சாறுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வழியாக செல்லும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தினந்தோறும் இங்கு பழச்சாறு அருந்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் பழச்சாறு குடிக்கும் போது துர்நாற்றம் வீசியதால், பொதுமக்கள் சந்தேகமடைந்து பழச்சாறு வண்டியை நோட்டமிட்டனர்.
அப்போது கண்ணாடி டம்ளரை கழிவுநீர் போல் உள்ள தண்ணீரில் கழுவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, விற்பனையாளரிடம் வாக்குவாதம் செய்ததோடு வண்டியையும் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.