தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஊடகங்களில் அளித்து வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என எஸ்ஆர்எம் குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.
திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான இடத்தில் 30 வருட குத்தகையின் அடிப்படையில் எஸ்ஆர்எம் நட்சத்திர ஓட்டல் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் குத்தகைக் காலம் முடிவடைந்த நிலையில் நிலுவைத்தொகையை எஸ்ஆர்எம் குழுமம் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள எஸ்ஆர்எம் குழுமம், 3 வருடங்களுக்கு ஒரு முறை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தொகை முழுவதும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஊடகங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அளித்துவரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.