ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
ஜம்மு காஷ்மீரில் 4-வது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 11-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றன.
இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டு விளையாடிய நிலையில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான குத்துச்சண்டை பிரிவில் தமிழகத்தின் மயிலாடுதுறையை சேர்ந்த நரிக்குறவர் இன மாணவர் வீரசிவாஜியும் கலந்துகொண்டு விளையாடினார். அப்போது பஞ்சாப் வீரரை வீழ்த்தி வீரசிவாஜி தங்கப்பதக்கம் பெற்றார்.