ஈரோடு அருகே இளம்பெண்ணிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞரை அப்பெண்ணின் காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பவானி திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த சேதுமணிகண்டனும், அவரது வீட்டிற்கு அருகே வசித்த பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த பெண் சேதுமணிகண்டனை விட்டுவிட்டு குகநாதன் என்பவரை காதலித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அப்பெண்ணின் பிறந்தநாளை ஒட்டி, முன்னாள் காதலன் சேதுமணிகண்டன் ஸ்டேட்டஸ் வைத்தத, இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், குகநாதன் சேதுமணிகண்டனை கத்தியால் குத்தி கொலை செய்த நிலையில், போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.