கோவையில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவலையடுத்து, மரப்பேட்டை அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டபோது பிளாஸ்டிக் மூட்டைகளில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கேரளாவை சேர்ந்த ரஷீத், கலில் ரகுமான் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.