திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரைக் கைது செய்த போலீஸார், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக – ஆந்திர எல்லையில் உள்ள மாதகடப்பா, தேவராஜாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சுமார் ஆயிரத்து 500 லிட்டர் சாராய ஊறல்களை அழித்த போலீஸார், கள்ளச்சாராய வியாபாரியான மாசிலாமணி என்பவரை கைது செய்தனர்.