ஈரோடு அருகே பூப்புனித நன்னீராட்டு விழாவில், பாரம்பரிய முறையில் தாய்மாமன் மாட்டுவண்டியில் சீர்வரிசை கொண்டு வந்து அசத்தியுள்ளார்.
கோபிசெட்டிபாளையம் அடுத்த கணபதிபாளையத்தைச் சேர்ந்த நந்தகுமார் – மோகனாம்பாள் மகள் ஹரிணிக்கு பூப்புனித நன்னீராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஹரிணியின் தாய்மாமன் பரமேஸ்வரன், பாரம்பரிய முறைப்படி 20 -க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மேளதாளங்களுடன் சீர்வரிசை எடுத்து வந்து அசத்தியுள்ளார். இந்த சம்பவம் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி உறவினர்களை நெகிழ வைத்தது.