திருச்சியில் பணம் கேட்டு கொடுக்க மறுத்த பால் வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு இளைஞர்கள் தப்பியோடினர்.
கருமண்டபத்தைச் சேர்ந்த ராஜா பால் வியாபாரம் செய்து வந்ததுடன் பெட்டிக்கடையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவருடைய கடைக்கு வந்த இரண்டு இளைஞர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் ராஜா பணம் கொடுக்க மறுத்ததால் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
தகவலறிந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.