கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் பகுதியில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் சோதனை மேற்கொண்ட போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கிருஷ்ணா, அம்ர்பிரீத்சிங், மோகன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 47 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பிலான ஹான்ஸ் பொருட்களை பறிமுதல் செய்தனர்.