இன்று இந்திய கல்வித் துறையின் சிறந்த நாள் என பிரதமர் மோடி தெரிவத்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் இளைஞர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் என தெரிவித்துள்ளார்.
நாளந்தா பல்கலைக்கழகத்துடன் உள்ள தொடர்பை எடுத்துரைத்தள்ள பிரதமர், நாட்டின் கல்வித்துறைக்கு இன்று சிறந்த நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம், உலகின் முதல் உறைவிட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.