நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழக விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நள்ளிரவு 2 கரடிகள் நுழைந்துள்ளன.
தகவலறிந்த வனச்சரகர் சசிகுமார் தலைமையில் வன ஊழியர்கள், கரடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் கரடி நுழைந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.